ஞாயிறு, 29 மே, 2011

கனகராயன் குளத்திலும் புத்தவிகாரை






புத்தபகவானுக்கு 
நாம் விரோதி அல்ல 
புத்த பகவானை பாவித்து
நில ஆக்கிரமிப்பு செய்கிறார்
ஆக்கிரமிப்பு சிங்களர்
எம் பூர்வீக வாழ்விடங்களில் 
புத்த கோவில்களை 
எம் அனுமதி அற்று
நிறுவுகிறார்    
காவி உடைகளுக்குத்தான் 
இன்று ஆசைகள் அதிகம் 
இன்னும் 
தமிழ் புல்லுருவிகள்
ஆதிக்க வெறியரின் 
எலும்புத்துண்டுகளுடன்   
எங்கள் விரல்கள் 
எம் கண்களை குத்துகின்றன 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக