வியாழன், 30 ஜூன், 2011

திங்கள், 27 ஜூன், 2011

உணர்வுகள் வரையும் பாடல்


 Posted Image

அமைதியாய் ஒரு அகவணக்கம் 
உருகுவது 
மெழுகுவர்த்தி அல்ல 
உயிராய் உருகும் மனிதம் 
தம் சொந்தங்களுக்காய் 
நினைவேந்தும் உருக்கம் 
கவிதைகள் உருகும் காவியம்
உணர்வுகள் வரையும் பாடல் 
உண்மை உள்ளங்களுக்கு கேட்கும்

                                                   -செல்வி-

சனி, 25 ஜூன், 2011

போர்க்குற்றமா?





போர்க்குற்றமா?
என் கண்ணுக்குத் தெரியவில்லையே?
அப்ப
என்ன தெரியுது?
எல்லாம் வெள்ளையாய் தெரியுது
அப்ப பிறகென்ன 
சமாதானம்தான் 

                              -செல்வி- 

அப்ப எல்லாச்சாவுக்கும் உவர்தான் காரணம்



எல்லாத்திற்கும் 
அதாவது 
போர்வெற்றிக்கு
நான் தான் காரணம் 
அப்ப
எல்லாச்சாவுக்கும் 
உவர்தான் காரணம் 
ஒருத்தரும் 
சாகவில்லை 
என்றும் சொல்லுறாரே 
இவர் 
மந்திர சூனியக்காரனோ?

                         -செல்வி-