சனி, 27 ஆகஸ்ட், 2011

இது விதியா? சதியா?



வலிமையானவர் 
கல்லையும் வைரம் என்கின்றனர் 
எல்லாம் தெரிந்தும் 
உலகப்பூனை கண்மூடி பால்குடிக்கும் 
இது விதியா? சதியா?
கொலைகளுக்கு காரணமானவர் 
கொலை செய்யப்பட்டார் 
உயிர்களின் பெருமதியும் 
எண்ணிக்கையில் தங்கவில்லை
உயர் வர்க்கத்தில் தான் தங்கியிருக்கிறது 
நீதி இல்லா உலகில் முழு அழிவு வரவேண்டும் 

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

இப்ப உண்மை தெரிஞ்சிடுமோ?



புலியும் இல்லை 
இல்லாட்டி 
மர்ம மனிதரை 
புலியில சாட்டிடலாம் 
இப்படி எத்தனையை 
சாட்டினனாங்கள் 
இப்ப 
உண்மை தெரிஞ்சிடுமோ? 

சனி, 20 ஆகஸ்ட், 2011

இதையாரிடம் முறையிடுவது ?

Posted Image


மர்ம மனிதன் 
அவனை பிடிக்க முற்பட்டால் 
சட்டத்தை கையில் எடுக்கவேண்டாம் 
தினமும் மக்கள் வதைபட 
தடுக்க நடவடிக்கையில்லை 
மக்களை மட்டும் கைதுசெய்கிறார்கள் 
இதையாரிடம் முறையிடுவது ?
எல்லாம் அவனே 
கள்ளனும் அவனே போலிசும் அவனே

புதன், 17 ஆகஸ்ட், 2011

தன்னை தவிர அனைவரையும் முட்டாளாய் கருதும் கோத்தா


தன்னை தவிர 
அனைவரையும் முட்டாளாய் 
கருதும் கோத்தா 
மர்மமனித நாடகம் 
பூனை கண் மூடி 
பால் குடிக்கிறது 
அவசர காலசட்டத்தின் 
லாபங்களை துறக்க தயார் இல்லை 
மர்மம் கலை ஆடுகிறது 
விஞ்ஞானத்துடன் விளையாடும் 
அசல் மஞ்சள் துண்டு 

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

நல்லவர் வேஷம் இடுகிறார்கள்



கொலைகளுக்கு பரிகாரமா ?
நரகத்திலும் ஒன்றாக இருப்பார்கள் 
கூட்டுக்கொலைகள் ஒன்றா?இரண்டா?
நயவஞ்சகம் நிறை மிருகங்கள் 
நல்லவர் வேஷம் இடுகிறார்கள் 

ஒரு சுத்த வீரனை இழிவுபடுத்தல் நியாயமா?



ஆக்கிரமிப்பாளனுக்கு 
எதிராய் துணிவுடன் 
போராடிய வீரன் 
சங்கிலிய மன்னன் 
அவன் சிலையை 
ஆக்கிரமிப்பாளனுக்கு 
காட்டிக்கொடுப்பவர் 
திறப்பது 
என்ன கொடுமை  

ஒரு சுத்த வீரனை 
இழிவுபடுத்தல் நியாயமா?

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

பொய்யன் அண்ணனை காட்டிக்கொடுத்தான் கோத்தா



பொய்யன் அண்ணனை 
காட்டிக்கொடுத்தான் கோத்தா 
மக்களில் ஒருவர்கூட இறக்கவில்லை -அண்ணன் 
மக்கள் சாகாமல் யுத்தமா?
இருவருடத்திட்கு பின் 
கொலைகாரத் தம்பி 

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

எங்களுக்கு ஐந்தறிவு தானே



நாங்கள் உழைப்புக்காய் புல்லு வெட்டுவோம் 
நன்றியிருக்கிறது 
காவல் காப்போம் 
சுயநலமும் அவ்வளவு இல்லை
எங்களை டக்லஸ் கருணாவுடன் 
ஒப்பிடவேண்டாம் -ஆனால் 
அவர்களைப்போல் 
நாமும் காட்டிக்கொடுப்போம் 
எங்களுக்கு ஐந்தறிவு தானே