ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழர் உயிரை பணயம் வைத்து புலம்பெயருகின்றனர்

boat_people

தமிழனின் வாழ்நிலம்
அழகானது,வளமானது
இன்று
சிங்கள அட்டூழியத்தால்
தமிழர் அகதியாகின்றனர்
உயிரை பணயம் வைத்து
புலம்பெயருகின்றனர்
சிங்களவர் தின்ற உயிர்களில்
கடலில் கரைந்த உயிர்களும் சேரும்
அகதிவாழ்வின் கொடுமை
அனுபவித்தாலே புரியும் 

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

நவீன துட்டகைமுனுக்கள்

வெலிவேரிய ஆர்ப்பாட்டத்தை அடக்க இராணுவத்தை வரவழைத்த காவற்துறை அதிகாரி யார்?



ராஜபக்சர்களின் அராஜகம்
குடிதண்ணீரில் மட்டுமல்ல
பள்ளிவாசல்களிலும் வியாபித்துள்ளது
நவீன துட்டகைமுனுக்கள்
இடியமீனையும் சாப்பிடுகிறார்கள்
காவியுடையுடன்,
கழுத்தில் சிவப்புத்துண்டுடன்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நான் ஏன் என்று கேட்கவில்லை



அடுத்த இனத்தவனை
கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
என் இனத்தவனை
கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
அயலவனை கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
இன்று
என் சகோதரனை கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
நாளை----?