புதன், 30 நவம்பர், 2011

வன்னி விலைமதிப்பற்ற மண்














வன்னி மண்ணின் துயர்
வார்த்தைகளுள் அடங்காதது
வன்னி வரலாற்றில் வாழும்
வளமான மண்
வாய் பேச முடியா சோகத்தில் இன்று
வாசம் இழந்து கிடந்தாலும்
தமிழன் பெருமை நிறைந்த மண்
அதிக விலை கொடுத்தாலும்
விலைமதிப்பற்ற மண்     

ஒப்பற்ற வாழ்வு வாழ்ந்தவர்



விதவைகளின்
அகதிகளின்
அனாதைகளின் மண்
ஒப்பற்ற வாழ்வு வாழ்ந்தவர் 
உலகமேடையில்
காட்சி பொருளானோம்   

ஞாயிறு, 27 நவம்பர், 2011

இதற்கு பதில் என்ன?



சிங்கள அராஜகம் 
ஒன்று இரண்டல்ல  
தினமும் ஓராயிரம் 
புதைகுழி தொடக்கம் 
கோயில் வரை அரச வன்முறை 
இதற்கு பதில் என்ன?  

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே









 

இன்று மாவீரர் நாள்

உடைக்கப்பட்ட கல்லறைகளை சூழப்படும் காலம் - செந்தோழன்

இன்று மாவீரர் நாள்
துயிலும் இல்ல சிதைவுகளில்
தமிழர் மனங்கள் உறைந்து கிடக்கிறது
சுதந்திரத்தின் தேவை
இன்று அதிகமாகிறது
என்ன ஏது செய்வது என்று
மனம் அங்கலாய்த்தாலும்
மீண்டும் பழைய காலம் வரும்
நம்பிக்கை விடிவெள்ளியாய் தெரிகிறது
கனவை மீட்டிட
இன்றும் ஒளி ஏற்றப்படும்
எதிரிக்குள்ளும் சலனமில்லாமல்       

சனி, 26 நவம்பர், 2011

மாவீரர் ஈழமெங்கும் வாழும் சாகா வரம் பெற்றவர் நீங்கள்



மாவீரர்களுக்கு வீரவணக்கம்
ஒப்பற்றவர் நீங்கள்
மனிதத்தில் புனிதம் செதுக்கியவர்கள் நீங்கள்
மானிட தர்மத்திற்கு
மகுடம் சூட்டியவர் நீங்கள்
ஈழமெங்கும் வாழும்
சாகா வரம் பெற்றவர் நீங்கள்
உங்கள் கனவுகளும்
எங்கள் கனவுகளும் ஒன்றே
கனவு நனவாகும் காலம் வரும்
அதுவரை ஓயோம் 

போர் முடிவடைந்த பின்னர்


2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் - இந்த நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 882 பேர் இலங்கையில் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாவீரன் கப்டன் மலரவன்

மாவீரன் கப்டன் மலரவன் 

வீராதி வீரன் 
மலை போல் ,சோலை போல் 
வாழ்விருந்தும் 
இனமானமே பெரிதென்று 
 விடுதலைக்கு உயிர் தந்தீர் 
விலை மதிப்பற்ற வீரனே 
துணிவின் நிமிர்வே
கனிவின் மொழியே 
வீர வணக்கம்      

புதன், 23 நவம்பர், 2011





மகிந்தரின் நாடகம்
நல்லிணக்க குழு அறிக்கை ஏமாற்று நாடகம்

செவ்வாய், 22 நவம்பர், 2011

இலங்கை பாராளமன்றத்தை பார்த்தியலே





இலங்கை பாராளமன்றத்தை பார்த்தியலே
நாட்டுக்கு முன்மாதிரியாய் நடக்கினம்
இங்கயே சண்டை பிடிச்சால்
வெளியில எப்படி இருக்கும்?
முழுக்காவாளிகள் கள்ளவோட்டு போட்டு
இதுக்குள்ள புகுந்துட்டுதுகள்  

திங்கள், 21 நவம்பர், 2011

உயிர் தந்த வீரர்களின் வணக்க வாரம்

Posted Image


நாட்டுக்காய்
உயிர் தந்த வீரர்களின் வணக்க வாரம்
இன்று தொடங்குகிறது
எங்களின் இனத்திட்க்காய்
உயிர்க்கொடை தந்தவரின்
நினைவுகளை ஏந்தும்
புனிதவாரம்
மன அஞ்சலி செய்வோமாக 

நீ ஓர் மாசற்ற வீரன்




உன்னைப்போல் ஒரு வீரன்
தரணியில் தோன்றவில்லை
உன்னால் தமிழினம் தலை நிமிர்ந்தது
உன்னாலத்தான்
தமிழர் இனம் உலகிற்கு
மேலும் அறிமுகமாயிற்று
உன்னால் தமிழன்னை பெருமைப்படுகிறாள்
நீ ஓர் மாசற்ற வீரன் 

கொலை ஆய்வு அறிக்கை



கீ கீ கீ 
கொலைகாரனிடமே 
கொலை ஆய்வு அறிக்கை 
ஒப்படைப்பு 
பேயிட்கு பேன் பார்த்த கதை 
  கீ கீ கீ 

ஞாயிறு, 20 நவம்பர், 2011

கார்த்திகை 27



கார்த்திகை 27 
மனது பாரமாகிறது 
வீரர்களின் கனவு 
நனவாகாமல் 
மனது பாரமாகிறது 
வாழ்பவருக்கு 
சுமை கூடுகிறது 
பொறுப்பை உணர்வோமா?

சனி, 19 நவம்பர், 2011

தமிழினப் படுகொலையின் பங்காளிக்கு ஆக மூன்று வருட சிறை




திட்டமிட்ட
தமிழினப் படுகொலையின்
பங்காளிக்கு
ஆக மூன்று வருட சிறை
கொலைகாரர்கள்
கூண்டுக்குள்ளும் , வெளியிலும்
வாழ்கிறார்கள் ஆள்கிறார்கள்
அவர்களுக்கும் அவர் பரம்பரைக்கும்
ஆண்டவனின் தண்டனை எப்போது?  

புதன், 16 நவம்பர், 2011

நான் தான் கொலைகாரன்


நான் தான் கொலைகாரன் 
இது இங்க குழந்தைக்கே தெரியும் 
இதுக்கு ஐ நா வோ சொல்லணும் 
நானும் என்ரபரிவாரங்களும் 
பிக்குகளும் 
இல்லை என்றுதான் சொல்லுவம் 
உதுவும்
இங்க விலங்குகளுக்கே தெரியும் )

செவ்வாய், 15 நவம்பர், 2011

தண்டனை போதும்



எனது கொலைகளுக்கு
தண்டனை போதும்
எல்லாம் கண்ணுக்கு
முன்னாலேயே நடக்குது
கொலைகள் செய்தவனுக்கு
செய்யச் சொன்னவன்
தண்டனை தருகிறான்
எனக்கே இவ்வளவு என்றால்
அவனுக்கு?

சனி, 12 நவம்பர், 2011

பார்க்க தவறாதீர்கள்


இது சிறிலங்கா
கொலைகார சக்கரவர்த்தி 
ஆட்சி செய்யும் சிறீலங்கா
நவீன இடியமீனின்
மக்களை புனர்வாழ்வளிக்கும்  
இலட்சணம்
பார்க்க தவறாதீர்கள்