சனி, 28 ஏப்ரல், 2012

எங்களுக்கு மத வேறுபாடுகள் இல்லை



செல்வம் இருந்தும் அதைத் துறந்த 
புத்த பகவானை காரணம் காட்டி 
புனித பிரதேசமாய் நிலத்தை சொந்தமாக்கி 
இன்னுமொரு புனிதமதத்தை 
கொச்சைப்படுத்தும் சிங்கள கொடூரம் 

புதிது புதிதாய் 
நூற்றுக்கணக்கில் 
புத்த பகவானின் சிலைகள் 
தமிழர் பூர்வீக நிலத்தில் 
முளைக்கின்றன 
நாளை 
அதை சுற்றியும் 
புனிதபிரதேசம் வருமா?
புத்த பகவானும் 
சைவ சமயத்தில் பிறந்தவர்தான் 
எங்களுக்கு 
மத வேறுபாடுகள் இல்லை 
ஆனால் 
இங்கு அது 
இன அழிப்பிற்கு  வழிகோலுகிறதே!



முஸ்லீம் மக்கள் 
வீதிக்கு வந்திருக்கிறார்கள் 
அவர்கள் பெயர்சொல்லி வாழும் 
அரசியல்வாதிகளையும்,புத்தி ஜீவிகளையும் 
எங்கும் காணோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக