புதன், 18 ஜனவரி, 2012

இனவிடுதலையை யாருக்கும் ஒப்புவிக்காத மனது



அனாதையாய்,அகதியாய் 
தனிமையில் திளைப்பதிலும் 
ஒரு சுகம் இருக்கிறது 
சொற்ப ஊதிய வேலையாயினும் 
பறவையின் சுதந்திரம் கிடைக்கிறது 
வெறும் அறைக்குள் முடங்கினாலும் 
என் தேவைகளுக்காய் 
யாரிலும் தங்கியிராத வாழ்வு 
என்பாட்டில் பாட்டு பாடும் வாழ்வு
இனவிடுதலையை 
யாருக்கும் ஒப்புவிக்காத மனது   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக