புதன், 1 ஜூன், 2011

உழைத்து உழைத்து ஓடாய்த்தேய்ந்தீர்




உழைத்து உழைத்து 
ஓடாய்த்தேய்ந்தீர் 
உழைப்பிட்கு ஏற்ற 
ஊதியமின்றி 
காலங்கள்தான் கழிந்தது
லயன்களை தாண்டி 
வாழ்க்கை இல்லை 
வசந்த பூமியில்
வசந்தங்கள் உமக்கு 
சொந்தமில்லை 
அரசியல்வாதிகள்
வாய்க்கு அரிசிதான் 
போட்டார்கள் 
21 ஆம் நூற்றாண்டில் 
கொடுமைகளின் 
சாட்சி நீங்கள் 

                                 -செல்வி-  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக