திங்கள், 25 ஏப்ரல், 2011

வீரவசனத்தை நீ பேசு கூட்டாளிகள் கைவிடமாட்டாங்கள் .



ஒன்றல்ல இரண்டல்ல
எத்தனை ஆயிரம் கொலை செய்தோம்
பல மறந்தே போய்விட்டது
நாய் கொல்ல சட்டமில்லா நாட்டில்
கொலை கொலையாம் பனங்காய் 
ஒன்றும் நடக்கவில்லை
ஒருதமிழனும் சாகயில்லை
சீன வெடியை கொளுத்தி முள்ளிவாய்க்கால்
பிடிச்சாச்சு
கோயபல்சும் மண்ணாங்கட்டியும்
என்னைவிடவா?
ஐ நா விற்கு தெரிஞ்சிருக்குமோ ?
யாருக்குத்தான் தெரியாது
அம்மாடி கொஞ்சமா கொலை
இப்ப என்ன செய்யிறது
உண்மையாய்
சண்டைபிடிச்சவங்களை மாட்டிவிடுவமா?
சரத்தை,இந்தியாவை,சீனாவை-----
போடா
மகாவம்சத்தையே மாத்தி எழுதப்போறம்
இதுக்குள்ள உண்மை தெரிஞ்சால்--
நல்லா இருக்காது
"காட்போட் வீரர் "உறுதியாயிடும்.
வீரவசனத்தை நீ பேசு
கூட்டாளிகள் கைவிடமாட்டாங்கள் .
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக