அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

உறங்காத மனது

அடையாளமிழந்து
வீடு உறங்கிற்று
உண்ண உணவற்று
சமையல் கூடம் உறங்கிற்று
வேலியற்று
வீதி உறங்கிற்று
சோகத்தில்
ஊரே உறங்கிற்று
சோர்ந்து
கண்களும் உறங்கிற்று
மனக்கண்கள் மட்டும்
சதா திறந்திற்று
சிவனின் நெற்றிக்கண்ணாக மாற
துடித்திற்று.
                -செல்வி-                                                 

1 கருத்து: