இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

சனி, 19 பிப்ரவரி, 2011

காலை மலர்ந்தது

சேவல் கூவி விடியல் அறிவிக்க,
பறவைகளின் ஆரவாரம் காதினில் இசைக்க,
கிழக்குவானிலே கதிரவன் உதயமாக.
மக்கள் துயில் களைந்து 
காலைக்கடன் கடந்து
தொழிலுக்கும்,பள்ளிக்குமாய் விரைய,
பூக்கள் விரிந்திட,பச்சை வயல்கள் சிலிர்த்திட,
புள்ளினங்கள் இரை தேடிச்செல்ல ,
குளக்கரையை தாமரை அழகு செய்ய,
ஆவினங்கள் களனி தேடிச் செல்ல
இரசிக்க கண்கள் இரண்டு போதுமா?

                                                               -சு.சுருதி-    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக