ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கலோ பொங்கல்



தமிழரின் தனித்துவ விழா தைப்பொங்கல்
யார் தமிழன்?
சுயநலத்துள் சுருங்கிக்கிடப்பவனா?
காட்டிக்கொடுக்கும் பச்சோந்தியா?
விடுதலைக்கு உயிர் தந்தவனா?
யார் தமிழன்?
என் ஊர் பாதுகாப்பு வலயத்தினுள்
எமக்கோ பாதுகாப்பு இல்லை
சொந்த வீட்டில் பொங்கி ,சுற்றத்துடன்
இணைய வழி இல்லை
பொங்கலோ பொங்கல்
கோடரிக்காம்பு அமைச்சரும்,அடிவருடிகளும்
பச்சை பேய்களும்
எம் வீதியில் 
சிரித்து உலாவும் பொழுதில் 
நானோ வாடகை அறையில் ,தனிமையில்
வீதிக்கு வராமல் முடங்கிக்கிடக்கிறேன் 
பொங்கலோ பொங்கல் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக