திங்கள், 9 ஜனவரி, 2012

"மலரன்னை " தமீழீழம் தந்த சிறந்த எழுத்தாளார்களில் ஒருவர்

"மலரன்னை " தமீழீழம் தந்த சிறந்த எழுத்தாளார்களில் ஒருவர் .  இவர்
தன் இளமைக்காலத்தில் புகைப்பட கலைஞராகவும்,ஓவியங்கள்
வரைவதிலும் சிறந்து விளங்கினார்.இவர் ஒரு ஹோமியோபதி
மருத்துவராக இருந்தபோதும் தையல் கலையில் வல்லவர்.
                               இவரது எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள்
பல்வேறு பத்திரிகைகள்,வானொலிகளில் வெளியாகி வரவேற்பு
பெற்றன.இவரது முட்பத்தைந்திட்கும் மேற்பட்ட நாடக எழுத்துருக்கள்
புலிகளின் வானொலியில் ஒலிபரப்பாகி பலத்த வரவேற்பை
பெற்றன.இவரது நாற்பத்தைந்து அங்கங்களைக் கொண்ட
வானொலி நாடகம் ஓன்று புலிகளின் குரல் வானொலியில்
தொடராக ஒலிபரப்பாகி அமோக வரவேற்பை பெற்றது.இவரது
பத்து ஆங்கிலக்கவிதைகள் Hotspring பத்திரிகையில் வெளியாகி
பலரின் கவனத்தையும் ஈர்த்தது.இவர் சில மொழிபெயர்ப்புகளையும்
செய்துள்ளார்.இவரின் நாவல் எழுத்துரு ஈடாக பல வெளிவரா
ஆக்கங்கள் போரிடத்தில் அழிந்து போய்விட்டன.
                               இவரது சிறுகதைகள்,நாடக எழுத்துருக்கள்
இருபத்தி மூன்றுமுறை பரிசு பெற்றுள்ளன.சிறுகதைக்காக
ஒருதடவையும்,நாடக எழுத்துருவிற்காக இரு தடவையும்
அகில உலக ரீதியில் பரிசு பெற்றுள்ளார்.இவர் தமீழீழ தேசியத்
தலைவரிடம் பரிசு பெற புலிகளின்குரல் வானொலிக்கூடாக
தேர்வு செய்யப்பட்டும் சுகயீனம் காரணமாய் அதை பெற
முடியாமல் போயிற்று.தேசியத்திற்கு உண்மையாய்
உழைத்தமைக்காய் அவரும் அவரின் எழுத்துக்களும்
என்றும் நினைவு கூறப்படும்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக