செவ்வாய், 17 ஜனவரி, 2012

வீரர்களை விதைத்த மண்ணில் ஏன் இந்த அவலம் ?



சொந்த ஊருக்கு
நாம் போக முடியாது
வாழ்ந்த ஊர் நாராய்க்கிடக்கிறது  
அடித்தவனும்,உதவிய அடிவருடியும்
கூட்டாய் வருகிறார்கள்
புதினம் பார்க்கிறார்கள்
குசலமும் விசாரிக்கிறார்கள்
எங்களில் அக்கறை உள்ளவர் போல்
நாடகமும் வேறு
விலை போனவரால்
விலை பேசப்படும் கொடுமை
கடவுளே ! ஏன் இந்தக்கொடுமை ?
வீரர்களை விதைத்த மண்ணில்
ஏன் இந்த அவலம் ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக