ஞாயிறு, 8 மே, 2011

அம்மாவே தெய்வம் வேறொன்றும் ஈடில்லை


 


அம்மாவே தெய்வம் 
வேறொன்றும் ஈடில்லை 
இன்று அன்னையர் தினம்
வன்னியில்
பிள்ளைகளை இழந்த அன்னைகளும் 
அன்னைகள்  இல்லா பிள்ளைகளுமாய் 
காலம் கழிகிறது 
வன்னிமண் 
சிங்களத்தால் 
பேரிழப்பை சந்தித்தது 
அரசும்,
அரசின் தமிழ் பகடைக்காய்களும்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்கள் 
உங்களது தாய்,தந்தை,பிள்ளை 
இறந்தால் இப்படிச் சொல்வீர்களா?
வரலாறு அழியாது
பகடைக் காய்களே!
சொந்த இரத்தத்தில் 
குளிக்கிறீர்கள்
காலம் பதில் சொல்லும் -அதுவரை
தாய்களின் கண்ணீரை 
குடித்து முடியுங்கள்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக