ஞாயிறு, 29 மே, 2011

தமிழ்ப் புல்லுருவிகளும் காயம் தந்தவனுடன் இருப்பது மகா கொடுமை




வாழ்வின் காயங்கள் 
ஈழத்தமிழனுக்கானவை 
வெளிக்காயங்கள் சிறியவை
உள்காயங்களோ மாறாதவை
என்றும் கொதி நிலையில் 
நோகின்றன 
காயங்களை தந்தவன் 
அவற்றை மறைக்கலாம்
வேதனையில் வாழ்பவன்
என் செய்வான்?
ஆற்றமுடியா காயங்களுடன் 
நாம் -எல்லாம் சரி 
தமிழ்ப் புல்லுருவிகளும் 
காயம் தந்தவனுடன் இருப்பது
மகா கொடுமை 
தமிழனின் தலை விதியை 
யார் மாற்றுவார்?

                                          -செல்வி-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக