வெள்ளி, 4 மார்ச், 2011

பகல் கொள்ளை நடக்கிறது.

புத்த பகவானுக்கு 
நாம் எதிரியில்லை-
மதத்தினூடான
இன அழிப்பை எதிர்க்கிறோம்.
வன்னிஎங்கும்
 தினம் புதிதாய் முளைக்கின்றன
புத்த கோவில்கள்.
கோவில் பராமரிக்க 
பிக்கு வருவார்.தங்குவார்.
பாதுகாப்பிற்கு 
படைமுகாம்,சிங்கள மக்கள்.
மணலாறு,அம்பாறை,திருகோணமலையில்
அடித்த புயல் 
வன்னியில் மையம் கொள்கிறது .
பக்க பலமாய் பச்சோந்திகள்.
பகல் கொள்ளை நடக்கிறது.
                                        -செல்வி-

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக