ஞாயிறு, 6 மார்ச், 2011

என் தேசத்தினுள் இருள் அப்பிக்கிடக்கிறது.

என் தேசத்தினுள் இருள் அப்பிக்கிடக்கிறது.
பிஞ்சுப்பாதங்க்களை
இரும்புச் சப்பாத்து நசிக்கிறது.
கண்ணீர்க் கண்களில்
இப்போதெல்லாம்
இரத்தம்தான் கசிகிறது.
இழவு சொல்லாமல்
புண்ணாய்ச் செத்த உடல் போகிறது.
எல்லாம் போகிறது.

                                       -செல்வி-       

1 கருத்து: